உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையத்தினர் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் கனிமொழி முன்பள்ளியில் இன்று 02.10.2020 காலை 9.00 மணிக்கு இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து முன்பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.






















