கிராம உத்தியோகத்தர்களுக்காக நாடளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்றைய தினம் காலை வழங்கி வைத்தார்.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட எமது சனசமூக நிலையத்தின் செயலாளரும் உரும்பிராய் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உப செயலாளருமான சகாதேவன் மஜிந்தன் அவர்களுக்கு கிராம மக்கள் சார்பாகவும் புலம்பெயர் உறவுகள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.






