எமது வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியானது கடந்த (28. 03 .2024) வியாழக்கிழமை பாடசாலை முதல்வர் திரு குலசிங்கம் திலீபன் அவர்கள் தலைமையில் பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி சி. யமுனானந்தா (பழைய மாணவன் ,பிரதிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு இ. குவேந்திரநாதன் (பழைய மாணவர், தொழிலதிபர், கோண்டாவில்) அவர்களும் கௌரவ விருந்தினராக திரு. தி வேலும்மயிலும் (பழைய மாணவன் கனடா) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவிற்கான அனுசரணையை கனடாவாழ் பழைய மாணவன் பஞ்சலிங்கம் செந்தில் குமரன் அவர்கள் வழங்கியிருந்தார். பிரதம விருந்தினர் தனது உரையில் பேண்தகு அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களையும் அதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நல்லையா இல்லம் முதலிடத்தை தட்டிக் கொண்டது.
நிகழ்வில் பெருமளவான பெற்றோர்,பழைய மாணவர்கள்,நலன்விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.











































