கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானவைரபர் ஆலய வருடார்ந்த அலங்கார உற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை 05.05.2013 ஆரம்பமாகியது. நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக வாகீஸ்வரி முன்பள்ளி மாணவிகளின் நடன நிகழ்வு இரவு உற்சவத்தின் பின் நடைபெற்றது. தொடர்ந்து 09 தினங்களிற்கும் தெய்வீக நிகழ்வுகளை ஆலயத்தில் நடாத்த வாகீஸ்வரி சனசமூகநிலையத்தினர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.





















