வாகீஸ்வரி முன்பள்ளியின் அன்னையர் தின நிகழ்வு
வாகீஸ்வரி முன்பள்ளி மாணவர்களின் ஏற்பாட்டில் அன்னையர் தின நிகழ்வு இன்று வைகாசி இராண்டாவது ஞாயிறு (12.05.2013) நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சந்திராதேவி சுபாஸ்கரனும் சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச முன்பள்ளிகளின்இணைப்பாளர் திருமதி மாலதிதேவி விவேகானந்தனும் கௌரவ விருந்தினர்களாக வாகீஸ்வரி முன்பள்ளியின் முந்நாள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்பள்ளி பழையமாணவர்கள் பழையமாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































































